பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் பால்மாற்று சிகிச்சையின் பின் பெண்கள் சிறைக்கு மாற்றம்!!

670

பிரிட்டனில் பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர், பெண்ணாக பால் மாற்றம் செய்து கொண்ட தால் பெண்கள் மாத்திரம் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மார்ட்டின் பொன்டிங் எனும் இந்நபர் தற்போது ஜெசிக்கா வின்பீல்ட் என அழைக்கப்படுகிறார். இவர் ஆணாகப் பிறந்தவர். இவர் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 1995 ஆம் ஆண்டில் இவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பிராந்தியத்திலுள்ள, கடும் பாதுகாப்பு மிகுந்த வைட்மூர் சிறைச்சாலையில் இவர் அடைக்கப் பட்டிருந்தார். ஆனால், தான் பால்மாற்ற சத்திரசிகிச்சை செய்து பெண்ணாக மாறியுள்ளதால், ஆண்களுக்கான சிறையில் தன்னை தடுத்துவைத்திருப்பது பாரபட்சமான நடவடிக்கையாகும் என 2007 ஆம் ஆண்டு தெரிவித்தார்.

தன்னை பெண்கள் சிறைக்கு மாற்றுமாறு அவர் நீண்டகாலமாக கோரி வந்தார். இவ் வருட இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஷ்போர்ட் நகரிலுள்ள, பெண்களுக்கு மாத்திரமான புரோன்ஸ்பீல்ட் சிறைச்சாலையில் ஜெசிக்கா வின்பீல்ட் மாற்றப்பட்டுள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந் நபர், பால் மாற்ற சத்திரசிகிச்சை செய்ய அனுமதிக் கப்பட்டதை அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமர்சித்துள்ளார். “அவரின் உடல் மாறினாலும் மூளை மாறாமல் அப்படியே இருக்கிறது” என அப் பெண் விமர்சித்துள்ளார்.