வண்­ணத்­துப்­பூச்­சி­களை கொன்ற நபர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் தீர்ப்பு!!

659

அரி­ய ­வகை வண்­ணத்­துப்­பூச்­சி­களை பிடித்­தமை மற்றும் கொன்­றமை தொடர்­பான வழக்கில் பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்­ற­வாளி என அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

57 வய­தான பிலிப் குலென் எனும் இந் ­நபர், லார்ஜ் புளூ (Large Blue) எனும் வண்­ணத்­துப்­பூச்­சி­களை பிடித்துக் கொன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

லார்ஜ் புளூ இன வண்­ணத்­துப்­பூச்­சிகள், 1795 ஆம் ஆண்டில் பிரிட்­டனில் முதல் தட­வை­யாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 1979 இல் பிரிட்­டனில் இவ்­வினம் அழிந்­தது.

எனினும், 1983 ஆம் ஆண்டு பல லார்ஜ் புளூ வண்­ணத்­துப்­பூச்­சிகள் பிரிட்­ட­னுக்கு கொண்­டு­செல்­லப்­பட்டு அங்கு மீண்டும் அவ்­ வண்­ணத்­துப்­பூச்­சிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­ வண்­ணத்துப் பூச்­சி­களை பிலிப் குலென் பிடித்து கொன்று விற்­பனை செய்து வந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

இது தொடர்­பான வழக்கில் அவர் குற்­ற­வாளி என பிரிஸ்டல் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.