மூன்று வகை தொற்று நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!

470

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில் இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து தம்­மையும், தமது சிறு பிள்­ளை­க­ளையும் இயன்­ற­ளவு பாது­காத்துக் கொள்­ளு­மாறு மினு­வாங்­கொடை சுகா­தார வைத்­திய அதி­காரப் பிரிவின் பத்­தண்­டு­வன பொது சுகா­தாரப் பரி­சோ­தகர் எஸ். ஆர். எம். எஸ். ஆர். சமர திவா­கர தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பாக, சிறு பிள்­ளை­க­ளுக்கு இந்­நோய்கள் விரைவில் தொற்றக் கூடும் என சுகா­தார அமைச்சு சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளதால், இது குறித்து பெற்றோர்கள் முன் கூட்­டியே விழிப்­பு­ட­னும், அவ­தா­னத்­து­டனும் செயற்­ப­டு­மாறும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை,கோப்­பி­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் டெங்கு மற்றும் டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் காய்ச்சல் மிகத் துரி­த­மாகப் பரவி வரு­வது தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், இப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள எவ­ருக்­கா­வது காய்ச்சல் ஏற்­பட்­டுள்ள அறி­கு­றிகள் தொடர்ந்து மூன்று நாட்­க­ளுக்கு மேல் தென்­பட்டால் எந்­த­வித கால தாம­த­மு­மின்றி அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.