கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 200 பேர் உயிரிழந்துள்ளதுடன், 202 பேர் காயமடைந்துள்ளனர்.
பல மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக, மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புடுமயோ மாகாணத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் அதில் பலரை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மீட்பு பணிக்காக 1100 இராணுவம் மற்றும் பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.








