சூரியனால் இலங்கையர்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து!!

551

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுப்பதால் இலங்கையர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதோடு அதிக வெப்பமான காலநிலை காணப்படுகின்றது.

அதற்கமைய அதிகப்படியான சூரிய ஒளியால் மக்களுக்கு கணக்களில் பிரச்சினை ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் சூரிய ஒளிபடும் இடங்களில் அதிகம் நடமாடுவதனை தவிர்க்குமாறு இலங்கை கண் வைத்திய சங்கத்தின் செயலாளர் தில்ருக்ஷி ஆரியசிங்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.