திறமையுள்ள வறுமையான நண்பிக்காக வீதியில் போத்தல் பொறுக்கும் நண்பர்கள்!!

479

 
சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக தேவைப்படும் நிதியை பெற்றுக் கொள்வதற்காக போத்தல்களை சேகரிக்கும் இளைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பாரம் தூக்கும் சர்வதேச போட்டியில் கலந்துக் கொள்ளும் பெண் போட்டியாளர் ஒருவருக்கான நிதியை பெற்றுக்கொள்ளவே போத்தல்களை சேகரித்து விற்பனை நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெலிகந்த பிரதேசத்தில் சக நண்பிக்காக இவ்வாறு இளைஞர் குழுவொன்று தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

தேசிய பாடசாலை பாரம் தூக்கும் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம், வென்ற ஐ.பீ.லக்ஷிகா மதுமாலி உடற்பயிற்சி உபகரணங்களை கொண்டு பாரம் தூக்குவதற்கான பயற்சிகளை பெற்றுள்ளார்.

மலேசியாவில் இடம்பெற்ற பொதுநலவாய இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில் அவர் வெண்கல பதக்கம் ஒன்றை வென்றுள்ளார்.

எப்படியிருப்பினும் பொருளாதார பிரச்சினை காரணமாக எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் சில சர்வதேச போட்டிகளில் போட்டியிடும் சந்தர்ப்பங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய செவனபிட்டிய இளைஞர்கள் இணைந்து கடந்த ஞாயிற்று கிழமை 5000 போத்தல்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை குறித்த போட்டியாளருக்கு வழங்கியுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதர்வரும் காலங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அவசியமான பணத்தை தேடுவற்கு தாம் தயாராக இருப்பதாக குறித்த இளைஞர் குழுவினர் வாக்குறுதியளித்துள்ளனர்.

2020 ஆம் ஒலிம்பிக் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது இலக்கு என ஐ.பீ.லக்ஷிகா இதன் போது தெரிவித்துள்ளார்.