சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான வீரர்கள் தெரிவின்போது களத்தடுப்பும் உடற்தகுதியும் கவனிக்கப்படவுள்ளன!!

494

சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை சாதிக்க வேண்­டு­மானால் வீரர்­களின் களத்­த­டுப்பும் உடற்­த­கு­தியும் உய­ரிய நிலையில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகா­மை­யாளர் அசன்க குரு­சின்ஹ தெரி­விக்­கின்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகா­மை­யா­ள­ராக தனது ஆரம்பப் பயணம் திருப்­தி­க­ர­மாக அமை­வில்லை எனவும் அவர் கவலை வெளி­யிட்டார். தென் ஆபி­ரிக்­காவில் இலங்கை அணி வாங்­கிக்­கட்­டி­ய­போ­திலும் சொந்த மண்ணில் பங்­க­ளா­தேஷை டெஸ்ட் தொடரில் வெற்­றி­கொண்­டி­ருக்க வேண்­டிய எதிர்­பார்ப்பு தாரா­ள­மாக இருந்­தது.

ஏனெனில் கடந்த காலங்­களில் இலங்­கை­யிடம் பங்­க­ளாதேஷ் வாங்­கிக்­கட்­டிய அணி­யா­கவே இருந்­தது. இதற்கு முன்னர் ஏழு டெஸ்ட் தொடர்­களில் பங்­க­ளா­தேஷை இலங்கை தொடர்ச்­சி­யாக வெற்­றி­கொண்­டி­ருந்­தது. எனினும் டெஸ்ட் தொடரில் மட்­டு­மல்­லாமல் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் ஆகிய மூன்றும் 1 – 1 என்ற சம­நி­லை­யி­லேயே முடி­வ­டைந்­தது.

இதன்மூலம் பங்­க­ளாதேஷ் முதல் தட­வை­யாக எந்தத் தோட­ரிலும் இலங்­கை­யிடம் தோல்வி அடை­யாமல் நாடு திரும்­பி­யமை குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்க விட­ய­மாகும். ‘‘இந்த முடி­வுகள் எமக்கு பொருத்­த­மா­னவை அல்ல.

இந்த மூன்று தொடர்­க­ளிலும் நாங்கள் வெற்­றி­பெற்­றி­ருக்­க­வேண்டும். சொந்த மண்ணில் விளை­யா­டி­யதால் மூன்று தொடர்­க­ளையும் சமப்­ப­டுத்­தினோம் என்று கூறு­வது சரி­யல்ல. தொடர்­களை வெல்வோம் என எதிர்­பார்த்­தி­ருந்தோம்’’ என அசன்க குரு­சின்ஹ சர்­வ­தேச இரு­பது 20 தொடர் முடிவில் கூறினார்.

கடைசி சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் 177 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி துடுப்­பாட்­டத்தில் சோபிக்கத் தவ­றி­யதால் தோல்­வியைத் தழு­வி­ய­துடன் மஷ்­ராபே மோட்­டாஸா வெற்­றி­யுடன் இரு­பது 20 போட்­டி­யி­லி­ருந்து விடை­பெற்றார்.

‘‘கடைசிப் போட்­டியைப் பொறுத்­த­மட்டில் துடுப்­பாட்டம் ஏமாற்றம் அளிக்­கின்­றது. ஆடு­க­ளத்­திற்கு எவ்­விதத் தொடர்­பு­மில்லை. ஆனால் ஏதோ ஒன்று எங்கோ பிழைத்­து­விட்­டது. இவற்­றுக்கு பதில் கூறு­வது இல­கு­வல்ல. இதுதான் நாட்­டி­லுள்ள அதி சிறந்த ஆடு­களம். முதல் ஐந்து துடுப்­பாட்­டக்­கா­ரர்கள் பிர­கா­சித்­தி­ருக்க வேண்டும். இங்கு ஓட்­டங்­களைப் பெற­மு­டி­யா­தென்றால் அது பிரச்­சி­னை­யாகத் தான் இருக்­கப்­போ­கின்­றது’’ என்றார் அசன்க குரு­சின்ஹ.

களத்­த­டுப்பில் அதீத ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­து­ப­வர்­களே சம்­பியன் கிண்­ணத்­திற்­கான தேர்­வுக்கு தகுதி உடை­ய­வர்கள் என்­பதில் தானும் தெரிவுக் குழுத் தலை­வரும் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­துள்­ள­தாக அசன்க மேலும் கூறினார். இப் போட்­டிக்­கான இறுதிக் குழாம் இம் மாதம் 25ஆம் திகதி அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

‘‘களத்­த­டுப்பு தொடர்பில் வீரர்­க­ளுக்­கென சில திட்­டங்­களை வைத்­துள்ளோம். வீரர்கள் திட­காத்­தி­ரத்­துடன் இருந்தால் அவர்கள் களத்­த­டுப்­பு, துடுப்­பாட்­டம், பந்­து­வீச்சு ஆகிய சக­ல­வற்­றிலும் சிறப்­பாக செயல்­ப­டுவர்.

உள்ளூர் போட்­டி­களில் அதிக ஓட்­டங்­களைக் குவித்­தார்கள் என்ற காரணத்திற்காக யாரையும் தெரிவு செய்வதில்லை என்ற தெளிவான தகவலை தெரிவுக் குழுத் தலைவரும் நானும் வெளியிட்டுள்ளோம்.

களத்தடுப்பில் வீரர்கள் குறிப்பிட்ட தராதரத்தை அடைவதுடன் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருப்பது அவசியம்’’ என அசன்க குருசின்ஹ மேலும் தெரிவித்தார்.