கிளிநொச்சி விபத்தில் காயமடைந்த யுவதி மரணம்!!

1290

கிளிநொச்சி சேவயர்கடைச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக உந்துருளியும் விபத்துக்குள்ளாகி இறந்த வயோதிபரின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

யுவதி பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.