கடத்தல் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மீட்பு!!

465

china

சீனாவில் குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பலிடம் இருந்து 92 குழந்தைகள் மற்றும் 2 பெண்களை அந்நாட்டு காவல்துறை மீட்டுள்ளனர்.

சீனாவில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தல் நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்கும் கும்பலைச் சேர்ந்த 301 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கடத்தி வைக்கப்பட்டிருந்த 92 குழந்தைகள் மற்றும் 2 பெண்களையும் மீட்டுள்ளனர். இந்த மீட்புச் சம்பவம் எப்போது நடந்தது என்றோ குழந்தைகளைப் பற்றிய விவரங்களையோ காவல்துறை வெளியிடவில்லை.



சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தும் நடவடிக்கை அதிகரித்துள்