கொட்டாவி நோயின் அறிகுறியா?

1110

உடலுக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்து ஓர் அறிகுறியே கொட்டாவி. உடல் சோர்வு, பசி, தூக்கம் போன்றவற்றினால் கொட்டாவி வருவது சாதாரணமாகும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் அசதி மற்றும் தூக்கம் காரணமாகவே கொட்டாவி வருகிறது.

நாம் சலிப்பான சூழலிலோ அல்லது அலுப்பான சூழலில் அமர்ந்து இருந்தாலும் கொட்டாவி வருகிறது. வாய், நாக்கினை ரிலாக்ஸ் செய்திட கொட்டாவி உதவுகிறது.

பாடம் எடுப்பவர்களுக்கு தூக்கம் வருவது இல்லை அதை கவனிப்பவர்களுக்கே கொட்டாவி வருகிறது. கொட்டாவி விடும் போது ஆக்ஸிஜனானது உள்ளிழுக்கப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுவதற்கு மூளை நுரையீரலுக்கு கட்டளை இடுகிறது.



கொட்டாவி என்பது நோயல்ல. ஒரு அறிகுறியே. அடிக்கடி கொட்டாவி வந்தால் கட்டாயம் ஓய்வு தேவை. ஒரு மணி நேரம் தூங்குவது நல்லது. இயலாத சூழலில் முகம் கழுவி சிறிது புத்துணர்ச்சியினை பெறலாம்.

ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள இதய, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால் அவர்கள் அதை சமிக்சையாக எடுத்து கொள்ளவேண்டும்.

இது அவர்களின் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைப்பாட்டை குறிக்கிறது. உடனடியாக அவர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கவேண்டும்.