பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்கத் தடை!!

483

பாடசாலைகளை அண்மித்து 500 மீற்றர் தொலைவிற்குள் சிகரெட் விற்பனை செய்ய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் புதிதாக சிகரெட் கம்பனிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.

புகைத்தல், மதுபான பாவனையால் நாட்டில் வருடாந்தம் 25,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.