திருமணமான பத்தே நாளில் கணவர் மரணம் : புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

506

தமிழகத்தில் திருமணமான பத்தே நாளில் புதுப்பெண்ணின் கணவர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் குடும்பத்தாருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலவேசம், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 10- ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் அண்மையில் மறுவீடு சென்றனர். மறுவீட்டு விருந்து முடிந்த பின்னர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது மோதியதால் புதுமாப்பிள்ளை பலவேசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மணப்பெண் ரேவதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணமான பத்தே நாட்களில் ரேவதி கணவரை இழந்துள்ளதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.