வீதியோரத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த அவலம் : 19 பேர் பலி!!

524

வீதியோரமிருந்த கடைகளில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய லொறியில் சிக்கி சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியிற்கருகில் ஏர்பேடு எனும் பகுதியில் பயணித்த லொறியானது, சித்தூர் வீதி ஓரமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியதால், 20 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் மக்கள் நடமாட்டம்மிகுந்த சமயத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதால், சுமார் 20 பேர் வரையில் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த விபத்து தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குறித்த பகுதியிற்கு பொறுப்பான பொலிஸார், எதிரே வந்த லொறியின் மீது மோதாமல் தடுப்பதற்காகவே சாரதி லொறியை வேறு திசையை நோக்கி திருப்பியுள்ளதாகவும், இருப்பினும் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்தவர்கள் மீது மோதியுள்ளதாகவும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.