
பாணந்துறை பிரதேசத்தில் காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆடைக் கைத்தொழிற்சாலையில் கடயைமாற்றிய இளம் பெண் ஒருவரை காதலித்த நபர் அவருடன் உறவு கொண்டு அந்தக் காட்சிகளை வீடியோ படமெடுத்துள்ளார்.
வீடியோ காட்சிகளை காண்பித்து அச்சுறுத்தி அந்தப் பெண்ணை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஓராண்டு காலத்திற்கு மேலாக குறித்த பெண்ணின் மாதச் சம்பளத்தையும் சந்தேக நபர் பலவந்தமாக பெற்றுக் கொண்டுள்ளார்.
தமது காதலியுடன் நண்பர்கள் பாலுறவு கொள்வதற்கு சந்தேக நபர் பணம் அறவீடு செய்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஒக்டோபர் மாதம் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





