கோடைகாலத்தில் வெப்பத்தினால் அதிகளவு நீரினை பருகுவது கட்டாயம், தண்ணீரை அதிகமாக அருந்துவதால் உடல்நீர் சத்துடன் இருக்கும்.
அதிகப்படியான உணவினை நாம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீர் அருந்துவது நன்மையினை தந்தாலும் குறிப்பிட்ட நேரங்களில் நீரை அருந்தக்கூடாது.
நம் உடலுக்கு தேவையான நீரை அருந்திய பின்னர் அளவுக்கு அதிகமாக அருந்தக்கூடாது. நீர் அருந்துவது நன்மையினை தரும் என்றாலும் நம் உடலில் உள்ள இயற்கை உப்பினை வெளியேற்றிவிடும்.
உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்றால் சிறுநீரானது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்போது அதிகளவு நீரை அருந்தவேண்டும். தெளிந்த நிறத்தில் சிறுநீரானது வெளியேறினால் அதிக நீரை குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உணவினை நாம் எடுத்து கொள்ளும் முன்னர் 1 டம்ளர் நீரை பருகினால் அதிக உணவினை நாம் உட்கொள்வதை தடுக்கலாம்.
சாப்பிட்ட பின்னரோ அல்லது முன்னரோ அதிக நீரை நாம் பருகுவது அசௌகரியத்தினை உண்டாக்கும்.
சாதாரண உடற்பயிற்சிக்கு பின்னர் மட்டுமே நீரை அருந்தவேண்டும். மிக கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் தான் அருந்தவேண்டும்.
தாகத்தினை தணிப்பதற்கான குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரையே அருந்தவேண்டும்.
ஏனெனில் குளிர்பானங்களில் உள்ள கலோரிகள் பசியினை தூண்டி உடல் எடையினை அதிகரிக்க செய்யும்.