பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டலாபிசேக சிறப்பு நிகழ்வாக தமிழ் மாமன்றத்தினரின் பட்டிமன்றம்..!

660

அண்மையில் சிறப்பாக கும்பாபிசேகம் நிறைவேறிய பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் தற்போது நடைபெறும் மண்டலாபிசேக கால சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கடந்த 28/09/2013 சனிக்கிழமை தமிழ் மாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டி மன்றம் ஒன்று இடம்பெற்றது.

அண்மையில் தாபிக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் முதலாவது பொது நிகழ்வாக இடம்பெற்ற இந்தப் பட்டிமன்றம் “இன்றைய இளையதலைமுறையினர் மரபு விழுமியங்களை உணர்வு ரீதியாகப் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களிடம் திணிக்கப்படுகின்றதா? ” என்ற தலைப்பில் அமைந்தது.

இந்தப்பட்டி மன்றத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமை தாங்கினார். உணர்வு பூர்மாகப் பின்பற்றுகின்றனர் என்ற தலைப்பில் தமிழ் மாமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி. செல்வராசா மதுரகன் மற்றும் தமிழ் மாமன்றத்தின் தலைவர் ராமசாமி ராஜேஸ்வரன் ஆகியோரும் அவர்களிடம் திணிக்கப்படுகின்றது என தமிழ்மாமன்றத்தின் செயலாளர் கிருஷ்ணப்பெருமாள் நிக்சலன் மற்றும் தமிழ்மாமன்றத்தின் மேல்சபை உறுப்பினர் குலேந்திரன் அனுஜன் ஆகியோரும் உரையாற்றி இருந்தனர்.

மண்டபம் நிறைந்திருந்த மக்கள் நேரம் கடந்திருப்பினும் பொறுமையாக செவிமடுத்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

nara1 nara2 Nara3 Nara4 Nara5