இலங்கை அணியுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகரான தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (02.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான அலன் டொனால்ட் தனது பொறுப்பை உத்தியோகப்பூர்வமாக ஏற்றார்.






