பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!

677

இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படம் நிகழ்த்தி வருகிறது.

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும் திருத்தி எழுதுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த பாகுபலி-2 தற்போது வரை நான்கு நாட்களில் 600 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இதில், வெளியாவதற்கு முன்பே கர்நாடகத்தில் சத்யராஜிற்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம், விநியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது. இந்நிலையில் படம் வெளியான பின்னரும் மேலும் ஒரு சிக்கல் படக்குழுவுக்கு வந்துள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தில், குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பினரை புண்படுத்தியிருப்பதாக படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் “அரேகட்டிக்க பொரட்ட சமிதி” அமைப்பின் தலைவர்களுள் ஒருவர், நாங்கள் கொடூரமானவர்கள் அல்ல, பாகுபலி-2 படத்தில் எங்களை மனிதாபிமானமற்ற மற்றும் சமூக விரோத மக்களாக காட்டியிறுப்பதாக கூறி, குறிப்பிட்ட அந்த காட்சியில் வரும் கட்டிக்கா என்ற வசனத்தை நீக்கும்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.