எனது அரசியல் வாழ்க்கையை படுகொலை செய்ய முயற்சி : சஜித் பிரேமதாஸ!!

547

sajith

தம்மை தென்மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எடுத்து வரும் முனைப்புக்கள் குறித்து அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் பிரதி தலைவரான தம்மை தென்மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி தமது அரசியல் வாழ்க்கையை படுகொலை செய்யக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.