சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சில இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
180 வீடுகள் வரை சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.






