
இம்முறை இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் பரீட்சைக்கு தோற்றியர்களில் 223 908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
ஒகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற தரம் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.





