
வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விட சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பான சவாலே இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மேல் மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான 109 ஆசிரியர்களுக்கு நியமனத்தை வழங்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பித்து வந்த ஆசிரியர்கள் வடக்கு நோக்கி சென்று விட்டனர்.
இதனால் மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. வட மாகாண கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அந்த மாகாண சபை கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது.
அதேவேளை மேல் மாகாணதத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக வெளி மாகாணங்களில் இருந்து ஆசிரியர்களை மேல் மாகாணத்திற்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





