வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (14.05.2017) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விந்தன் கனகரத்தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.