பகிடிவதை செய்த சப்ரகமுவ மாணவர்கள் 20 பேருக்கு வகுப்புத் தடை!!

717

Sabaragamuwa University

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேருக்கு தற்காலிகமாக வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புதிய மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் ஆரம்ப விசாரணை முடிந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

20 மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை தொடரும் எனவும் விசாரணை முடிவில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.