தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் திஸ்ஸ அத்தநாயக்க!!

603

thissa

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தனது தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதோடு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.

திஸ்ஸ பதவி வகிக்கும் குண்டசாலை தொகுதி கடந்த மாகாண சபைத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியை கட்சி தலைவர் மீது மாத்திரம் சுமத்தாது தானும் பங்கெடுத்து தொகுதி அமைப்பாளர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்க முடிவு செய்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.