அடிபட்டு கிடந்த கீரிக்கு தண்ணீர் கொடுத்து காலை தடவிவிட்ட காவலர்!!

1080

தமிழகத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த கீரிக்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் இந்த காலத்தில் காவலர் ஒருவர் விலங்கிற்கு இரக்கம் காட்டி உதவியுள்ளது வைரலாகியுள்ளது.

கோத்தகிரியிலிருந்து வண்டிச்சோலை நோக்கி வரும் சாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

குன்னூர் காவல்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் ஆனந்த் என்ற காவலரே இவ்வாறு உதவியுள்ளார்.

ஆனந்த் உட்பட மூன்று காவலர்கள் குன்னூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, சாலையின் நடுவே கீரி ஒன்று அடிபட்டு கிடந்தள்ளது.

இதை பலரும் கண்டுக்கொள்ளாமல் போக, கடந்து போக மனமில்லாத ஆனந்த் கீரிக்கு அருகே சென்று தண்ணீர் கொடுத்து அதன் கால்களை நீவி விட்டுள்ளார்.

தண்ணீர் குடித்த கீரி தெம்புடன் மீண்டும் காட்டிற்குள் போனதாக காவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வரும் பயணிகள் உணவுகளை சாலை ஓரத்தில் கொட்டுவதால், அதை உண்ண விலங்குகள் வரும்போது இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடிவோவை பார்க்க