​நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!!

696

மூன்று மாதங்களுக்கான டெங்கு ஒழிப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.

தினமும் ஒரு மணித்தியாலத்தை ஒதுக்கி டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை பரிசோதிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ப்ரஷிலா சமரவீர தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 150 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.