வவுனியா விபுலாந்தா கல்லூரியில் இன்று (05.06) திங்கட்கிழமை சர்வதேச சூழல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக தெற்கு கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் ஏ. ஜெய்கீஸன் கோட்டக் கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் திருமதி ஸ்ரீரஞ்சன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
பாடசாலைப்பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள், நாட்டியம் நாடகம் என்பன இடம்பெற்றன.
வரவேற்புரையை ஆசிரியர் திரு.ஈஸ்வரன் வழங்கினார். பாடசாலை கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கென இலண்டன் V3 அமைப்பினர் கழிவகற்றும் வாளிகளை அன்பளிப்பு செய்தனர். இதனை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வழங்க ஆசிரியர் குரூஸ் பெற்றுக்கொண்டார். அதிபர் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. சுற்றாடல் குழு பொறுப்பாசிரியர் திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன் நன்றியுரை வழங்கினார்.
சூழல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு இந்நிகழ்வு பெறுமதி மிக்கதாக அமைந்தது. ஓவியம் கட்டுரை கண்காட்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.























