வவுனியாவில் கணிணி திருத்தும் நிலையத்தில் தீவிபத்து : பொருட்கள் எரிந்து நாசம்!!

768

 
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கணிணி திருத்தும் நிலையத்தில் இன்று (06.06.2017) மதியம் 2.15 மணியவில் திடீரென ஏற்ப்பட்ட தீ விபத்தினால் பல பொருட்கள் சேதமாகியுள்ளன. இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.
பிரிண்டர் திருத்தும் சமயத்தில் பிரண்டர் வயரில் ஏற்ப்பட்ட மின்சார கோளாறு காரணமாக பிரிண்டர் வயர் திடீரென தீப்பற்றியது. தீப்பற்றிய வயரை அங்கு பணிபுரிந்த ஒருவர் நிலத்தில் தூக்கி எறிந்த சமயத்தில் நிலத்தில் இருந்த காப்பற்றில் பற்றிய தீ கடை முழுவதும் பரவி கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின

உடனடியாக நகரசபையின் தீயணைப்பு வாகனம் வரைவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தினால் சுமார் இருபது லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பளாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.