60 வயதான வேலு பிரபாகரன், தான் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்த இளம் வயது நடிகை ஷெர்லி தாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தனது காதல் வாழ்க்கை குறித்து வேலு பிரபாகரன் கூறியதாவது, ஒவ்வொரு மனிதனுக்குமே ஆயுள் இருக்கிற வரை எதிர்பாலின அணைப்பும் துணையும் வேணும்.
தனிமைச் சிறையிலேயே இருந்தால் மனிதன் செத்துடுவான். அறுபது வயசுல ஒரு பெண்ணைத் தேடினா, அதை கொமெடியா, சீர்கேடான ஒரு விஷயமா, பாவி மாதிரி பாவிக்கிற பார்வை இந்தச் சமூகத்துக்கு இருந்தாலும், எனக்கும் காதல் வந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
வயதான ஆண் மீது காதல்கொண்ட ஒரு பெண்ணை இந்தச் சமூகம் உருவாக்கவில்லை. பலபேர் ‘இந்த வயசுல கல்யாணமா? அப்படி இப்படி இருக்க முடியாதேங்கிற என்றபடி, பாலியல் ரீதியிலயும் கேள்வி கேட்பாங்க. வயதான ஒருத்தனை விரும்பிட்டா, அந்தப் பெண்ணை கீழ்த்தரமா பார்க்கிற, பேசுற சமூகம் இது.
ஆனால், பாலியல் உறவுகள் தாண்டி, எல்லா மனிதர்களுக்கும் ஒரு அடிப்படை உணர்வு உண்டு. எனக்கும் அது இருக்கு.
ஷெர்லியை எனக்கு 15 ஆண்டுகளாக தெரியும். அரபு நாட்டுல ஐ.டி வேலைபார்க்கிற பொண்ணு. ஆறு மாசங்களுக்கு முன்னாடி, இங்கே வந்தப்போ சந்திச்சோம்.
நிறைய பேசினோம். எனக்கும் அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. என் உடல்நிலை அவங்களுக்குத் தெரியும். இன்னும் சில வருஷம் உயிரோடு இருந்தாலும், உங்களோடு வாழ்றது எனக்குப் பெருமைதான் அப்படின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷெர்லி, என் எல்லா போராட்டங்களுக்கும் உறுதுணையா இருப்பாங்கனு நம்புறேன் என்று கூறியுள்ளார்.







