சுவிஸில் இருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கை தமிழர்கள்!!

555

Switzerland

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது.

மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.



இந்நிலையில் இவர்களில் ஒருவர் நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஜக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது.