எம்முடனான போட்டியை பயிற்சிப் போட்டி என தெரிவித்த இந்திய அணியினர் : டிக்வெல்ல ஆதங்கம்!!

566

தென்னாபிரிக்காவுடனான தோல்வியின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே திறமையுடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற முயற்சி செய்வோம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிரான போட்டி, பயிற்சி போட்டி போன்றது என இந்திய வீரர்கள் தெரிவித்திருந்தனர். இது எம்மை காயப்படுத்தியிருந்தது. இவ்வாறான கருத்துக்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை. எனினும் சிறப்பான ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளோம்.

மைதானத்தில் இந்திய ரசிகர்கள் நிரம்பி காணப்பட்ட போதும் இலங்கை ரசிகர்கள் எமக்கு ஆதரவை நல்கியிருந்தனர். இந்நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான வெற்றி எம் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தையளிக்கின்றது என்றார்.