பாகிஸ்தானுடனான தீர்மானமிக்க போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!!

543

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக கார்டிவ், சொபியா கார்டன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்ள தீர்­மானம் மிக்க ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண குழு பி போட்­டியை இலங்கை அணி வீரர்கள் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­ள­வுள்­ள­தாக மெட்ரோ ஸ்போர்ட்­ஸுக்கு அணி முகா­மை­யாளர் அசன்க குரு­சின்ஹ தெரி­வித்தார்.

வீரர்கள் அனை­வரும் பூரண உடற்­த­கு­தி­யுடன் இருப்­ப­தாகத் தெரி­வித்த அவர், காலையில் (இன்று) ஆடு­க­ளத்தின் தன்­மையை அவ­தா­னித்த பின்னர் இறுதி பதி­னொ­ரு­வரைத் தெரிவு செய்­வ­தா­கவும் கூறினார்.

திசர பெரே­ராவின் தலையில் பந்­து­பட்­டதால் அவ­ருக்கு பாதிப்பு இல்லை என்றார் அவர். இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் ஈட்­டிய வெற்­றி­யா­னது இலங்கை அணிக்கு உற்­சா­கத்­தையும் மனோ­தை­ரி­யத்­தையும் கொடுத்­துள்­ள­தாக குறிப்­பிட்ட அசன்க குரு­சின்ஹ, பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் என்ன விலை­கொ­டுத்­தேனும் வெற்­றி­பெ­று­வ­தற்கு வீரர்கள் முயற்­சிப்­பார்கள் எனவும் தெரி­வித்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, சாமர கப்­பு­கெ­த­ர­வுக்குப் பதி­லாக குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் அபார அரைச் சதம் குவித்த தனுஷ்க குண­தி­லக்க இன்­றைய போட்­டி­யிலும் நிரோஷன் திக்­வெல்­ல­வுடன் ஆரம்ப வீர­ராக விளை­யா­டுவார் என பர­வ­லாக எதிர்பார்க்கப்படுகின்றது.

குசல் மெண்டிஸ் வழ­மைபோல் மூன்றாம் இலக்­கத்­திலும், தினேஷ் சந்­திமால் பெரும்­பாலும் நான்காம் இலக்­கத்­திலும் துடுப்­பெ­டுத்­தா­டுவர்.

தொடர்ந்து அணித் தலைவர் எஞ்­சலோ மத்யூஸ், அசேல குண­ரட்ன, குசல் மெண்­டி­ஸுக்குப் பதி­லாக குழா­முக்கு இரண்­டா­வது மாற்று வீர­ராக அழைக்­கப்­பட்ட தனஞ்­செய டி சில்வா, திசர பெரேரா ஆகியோர் துடுப்­பாட்ட வரி­சையில் இடம்­பெ­றுவர்.

வேகப் பந்­து­வீச்சில் லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவன் பிரதீப் அல்­லது நுவன் குல­சே­கர இடம்­பெ­ற­வாய்ப்­புள்­ளது.
ஆடு­க­ளத்தின் தன்­மையைப் பொறுத்து சில வேளை­களில் லக்ஷான் சந்­தகன் அணிக்கு அழைக்­கப்­ப­டலாம்.

இந்தப் போட்­டியைப் பொறுத்­த­மட்டில் பாகிஸ்­தா­னுக்கும் தீர்­மா­ன­மிக்க போட்­டி­யாக அமை­வதால் அவ்­வ­ணியும் விடா­மு­யற்­சி­யுடன் விளை­யாடும் என்­பதில் சந்­தே­க­மில்லை.