மனைவி, 1 வயது குழந்தையை பிரிந்து ஏங்கும் 97 வயது தந்தை!!(வீடியோ)

564

father

ஹரியானவைச் சேர்ந்த 97 வயது முதியவர் தனது மனைவி மற்றும் 1 வயது குழந்தையை பிரிந்து கவலைப்படுவது நெஞ்சை உருக்குகிறது.

உலகின் வயதான தந்தை என்று பெயர் பெற்றவர் ஹரியானவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ்(97). இவரது மனைவி சகுந்தலா(50), இந்த தம்பதியினருக்கு பிகர்மஜித் என்ற ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ரஜ்ஜித் என்ற மகன் பிறந்துள்ளான். ஒரு நாள் மூத்த மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சகுந்தலா அவனை தொலைத்துவிட்டார்.



இதுவரை எங்கு தேடியும் மூத்த மகன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராகவின் மனைவி தனது இரண்டாவது குழந்தையோடு வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து ராகவ் கூறுகையில், இன்று எனது இரண்டாவது மகனின் பிறந்தநாள். ஆனால் இந்நாளில் அவன் என்னோடு இல்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

இரண்டாவது மகன் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு, எனது மனைவி மற்றும் மகன் இல்லாமல் தனிமையில் வாழ்கிறேன். இது எனக்கு சிறை வாழ்கை போன்று உள்ளது.

மேலும் எனது மனைவியை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் அவளும் என்னை இன்றுவரை நேசித்துக்கொண்டுதான் இருப்பாள் என கூறியுள்ளார். ராகவ் அரசாங்கத்தின் ஒய்வூதியத்தில் வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.