வவுனியா தபால் நிலையத்தில் தனிச் சிங்கள மொழியில் அறிவிப்புப் பலகை : மக்கள் விசனம்!!

977

நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் 2வது நாளாக மேற்கொண்டு வரும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பை முன்னிட்டு வவுனியா தபால் நிலையத்தின் வாயிலில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களும் செறிந்து வாழும் இடத்தில் தனிச் சிங்கள மொழியில் மட்டுமே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளமை அங்கு வந்த சிங்கள மொழி தெரியாத பலரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.