அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

324

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிகை எடுத்துள்ளது.

நேற்று (13.06) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உலக சந்தையில் சீனியின் விலை குறைவடையும் போது வரிகள் விதிக்கப்படுமாயின், சீனியின் விலை அதிகரிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர வர்த்தகர்களால் சீனியின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஹோட்டல்களில் தேநீரின் விலையை அதிகரிப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.