மகனின் இறப்பை தாங்காத தாயின் உயிரும் பிரிந்தது : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

589

பெற்ற மகனின் இறப்பை தாங்கிக் கொள்ளமுடியாத தாயொருவர் சோகத்தினால் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை அலுத்நுவர பிரதேசத்தில் வசித்து வந்த 79 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் 54 வயதுடைய ஜயந்த பிரேமகுமார என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனின் இறப்புச் செய்தி கேட்டு மயக்கமுற்ற தாயார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணத்தினால் அந்தக் கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. இதேவேளை, உயிரிழந்த தாயின் இறுதிக் கிரியை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.