மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன் : காரணம் என்ன?

923

மனைவிக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த கணவர் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், இவர் மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஈஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேல்முருகன் ஈஸ்வரியை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று மாலை கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் ஈஸ்வரியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் வேல்முருகனை கைது செய்தார்கள்.