தென் ஆபிரிக்காவுக்கான இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஷஷிகலா சிறிவர்தன தலைமையிலான 14 வீராங்கனைகள் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் நோபர்ட் ஜோன்சன் ஐடாவும் பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிராக 3 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் 3 இருபது– 20 கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை மகளிர் அணி விளையாடவுள்ளது.
இதில் மட்டக்களப்பு மகஜனா கல்லூரி சார்பாக கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டுவந்த ஐடா இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை உதவி அணித் தலைவியாக ஏஷானி லொக்குசூரிய நியமிக்கப்பட்டு ள்ளார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் சாமரி அத்தப்பத்து, யசோதா மெண் டிஸ், தீப்பிகா ரசங்கிக்கா, டிலானி மனோதரா, நிலூக்கா கருணாரட்ன, சேபாலி வீரக்கொடி உதேஷிக்கா ப்ரபோ தினி, சாமரி செனவிரத்ன, மாதுரி சமுதிக்கா, சந்திமா குணரட்ன, ரெபெக்க வன்டர்ட் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கான தேசிய தெரிவாளர்களால் பெயரிடப்பட்டுள்ள இந்த குழாமுக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அங் கீகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்தது.







