வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இன்று யாழ்.குடா நாடு முழுவதிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக யாழ். குடாநாட்டில் போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. ஒருசில உணவகங்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர அனைத்து வியாபார நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பனவும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.