பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வீட்டு வேலியிலுள்ள மரங்களை தனது மகன் மற்றும் கணவரின் தலையைப் போன்று வடிவமைத்துள்ளார்.
48 வயதான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண், கலைப்பட்டதாரி ஆவார். தனது வீட்டு வேலியிலுள்ள மரங்களை கத்தரிக்கத் தீர்மானித்த இவர், தனது கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது கணவர் அன்ட்ரூ, மற்றும் மகன் பிரெனின் தலைகளைப் போன்று அம்மரங்களை கத்தரித்துள்ளார்.