போஜ்புரி படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ். 29 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் தூக்கு போட்டுக் கொண்டது பற்றி தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அஞ்சலி ஸ்ரீவாஸ்தவ் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அஞ்சலி தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைத்ததாக தெரியவில்லை.
என் மகள் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அஞ்சலியின் அம்மா தெரிவித்துள்ளார்.






