பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மருத்துவபீட மாணவியான இலங்கை யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பங்களாதேஷ் இளைஞர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சித்தகொங் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவியே கடந்த ஞாயிறன்று வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக 26 வயதான எம்.டி. ஆரிவ் எனும் இளைஞனை பங்களாதேஷ் பொலிஸார் திங்களன்று கைது செய்துள்ளனர். இவர் சித்தாகொங் நகரில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
சித்தாகொங் நகரின் குல்ஷி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு தன்னை ஆரிவ் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கடந்த திங்கட்கிழமை மேற்படி மாணவி குல்ஷி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என பங்களாதேஷின் டெய்லி ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தொலைபேசி மூலம் மேற்படி யுவதியும் ஆரிப்பும் அறிமுகமானதாகவும் ஜூன் 11 ஆம் திகதி முதல் இவர்கள் உரையாடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி யுவதியை அவரின் விடுதிக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வருமாறு ஞாயிறு இரவு ஆரிவ் அழைத்தார். அந்த யுவதி ஹோட்டலுக்குச் சென்றபின், அங்கு வைத்து யுவதியை ஆரிவ் வல்லுறவுக்குட்படுத்தியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆரிவ், சித்தாகொங் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது