சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த கூட்டத் தொடரின் போது மேலும் இரு நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக மிக திறமையாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசித்துவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கே டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை பத்திலிருந்து பன்னிரண்டாக உயர்வடையவுள்ளது.
இறுதியாக 2000 ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.






