பூமியைத் தாக்கவரும் விண்கல்லினால் ஆபத்து : லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

781

மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்கு அருகே பல விண்கற்கள் கடந்தவாறே இருக்கும். எனினும் அவை மூலமாக பூமிக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியக் கூறுகள் குறைவு. இந்த விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.

இந்த நிலையில் பூமியை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் தற்போது லண்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த விண்கல் நிச்சயமாக பூமியைத் தாக்கும் வாய்ப்பு உண்டு. எனினும் அது எப்போது நடக்கும் என்பது தற்போது கணக்கிடப்பட்டுக் கொண்டு வருகின்றது என லண்டனிலுள்ள பெல்பாஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் (ஆய்வாளர்) ஆலன் பிட்ஸ்சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூமியில் தாக்குதல் நடத்தப் போகும் விண்கல்லின் அளவு பற்றி தெளிவாக கணிப்பிட முடியவில்லை எனினும் சைபீரியாவில் விழுந்ததை விடவும் இது பெரிதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் காரணமாக பல நகரங்கள் முற்றாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச விண்கல் தினத்தன்று இந்த புதிய விண்கல் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் நேரலையில் மக்களின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பூமியைச் சுற்றிலும் சுமார் 1800 இற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றிவருகின்றன. அவற்றினை தொடர்ந்தும் விஞ்ஞானிகள் அவதானித்தவாறே இருக்கின்றனர்.

இவை பூமியை நெருங்கி வரும் போதே அதன் தாக்குதலுக்கு இலக்காகும் இடங்கள் அடையாளப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.