பிராந்திய 20 க்கு 20 போட்டியிலிருந்து மஹேல விலகல்!!

508

இங்கிலாந்து பிராந்திய 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். குறித்த போட்டித் தொடர்களில் லேங்கஷயர் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் விளையாடுவதற்கு மஹேல ஜயவர்தன ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தாம் குறித்த போட்டிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் களத்திலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன கடந்த வருடம் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடர்களில் சமர்செட் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.