பிரிட்டனில் பாடசாலை மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில் குட்டைப் பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பாடசாலை மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்பநிலை காரணமாக நீளக்காற்சட்டைக்குப் பதிலாக அரைக்காற்சட்டை அணிய பாடசாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
ஆனால், இதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து பாடசாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குட்டைப் பாவாடை, வெள்ளை நிற மேற்சட்டையுடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.






