கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 454 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வாகனங்களில் வந்து குப்பைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.






