என் மகளுக்காக பொறுமையாக இருக்கிறேன் : நடிகர் தாடி பாலாஜி!!

748

தனது கணவர் மீது புகார் கொடுத்தும் இன்னும் பொலிசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக நடிகர் தாடி பாலாஜி மீது அவர் மனைவி நித்யா கடந்த 50 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரைப் பழிவாங்க வேண்டும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

ஆனால் ஒரு பிரபலமாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? எவ்வளவு பெரிய தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வீர்களா? `நான் ஏற்கெனவே விவாகரத்து ஆனவன், நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன்.

இந்தப் பிரச்னையை எப்படி டீல் பண்றதுனு எனக்குத் தெரியும், நீ என்ன மூவ் பண்றியோ பண்ணு. நான் உன்கூட இருக்கிறதுக்கு எந்த லெவலுக்குப் போவேன்’ என்கிறார்.

இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளித்திருந்தால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துகின்றனர், இதனால் தான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

நித்யாவின் புகார் குறித்து பாலாஜி கூறியதாவது, காவல் நிலையத்தில் இருந்து போன் வரும்போதெல்லாம் அங்கு போய் நின்றிருக்கிறேன்.

நான் அவங்களுக்காக எவ்வளவு தூரம் இறங்கி போனாலும், அவங்க வழக்கம் போல மீடியாகிட்ட பேட்டி கொடுக்கிறது, பொலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறதுனு எனக்கு எதிரா எதையாவது பண்ணிட்டே இருக்காங்க.

இதையெல்லாம் பார்க்கும் போதுதான், அவங்களுக்கு பின்னால இருந்து யாரோ இயக்குற மாதிரி தெரியிது.

நானும் அவங்களை மாதிரி பேட்டி, புகார்னு கொடுக்கலாம். ஆனால், என் பொண்ணோட எதிர்காலத்துக்காக நான் அமைதியா இருக்கிறேன் என்று கூறியுள்ளார்