இலங்கையில் நாய்க்கு நடந்த இறுதிக் கிரியைகள்!!

347

 
களனியில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டுள்ளன. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் இறுதிச் சடங்கு போன்று, இந்த நாய்க்கும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை இளம் நாடாளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரினால் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளது.

மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நாய் உயிரிழந்துள்ளது. அந்த நாயின் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் இறுதி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.